திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக 16ஆவது பட்டமளிப்பு விழா பார்ன் ஹாலில் நடைபெற்றது. இணையதளம் வாயிலாக முதல்முறையாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கர் பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரத்து 777 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி பேசுகையில், "கல்வி மற்றும் கற்றல் என்பது ஒரு வாழ்நாள் செயல்முறை. இளம் பட்டதாரிகள் தங்கள் கல்வியின் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்த தொற்றுநோய்க் காலம், தனது 55 ஆண்டுகால உழைக்கும் வாழ்க்கையை மீண்டும் கற்றுக் கொடுத்துள்ளது.
விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், கேள்விகளைக் கேட்பது, திறந்த மனதுடன் இருப்பது ஆகியவை வாழ்க்கையில் எதையும் வெற்றிகரமாக கையாள மையமாக இருக்கும். விமர்சன சிந்தனை திறன்களின் மூலம் தான் ஒருவர் உண்மையில் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தன்மைக்கு மாற்றாக எதுவும் இல்லை.