தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2021, 1:00 PM IST

ETV Bharat / state

செம்மலை காப்புக்காட்டில் காட்டெருமை உயிரிழப்பு

திருச்சி: செம்மலை காப்புக்காட்டில் வயது முதிர்வின் காரணமாக காட்டெருமை உயிரிழந்தது.

செம்மலை காப்புக்காட்டில் காட்டெருமை உயிரிழப்பு
செம்மலை காப்புக்காட்டில் காட்டெருமை உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த செம்மலை காப்புக்காட்டில் பெண் காட்டெருமை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதற்கு சுமார் 8 வயது இருக்கும் எனத் தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்து வந்த மணப்பாறை வனச்சரகர் மகேஸ்வரன், கல்பட்டி வனவர் தலைமையிலான வனத் துறையினர் காட்டெருமையை ஆய்வுசெய்தனர். அப்போது வயது முதிர்வின் காரணமாக காட்டெருமை உயிரிழந்தது தெரியவந்தது.

இதனையடுத்து உடல் உடற்கூராய்விற்குப் பின் அருகில் இருந்த வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

இதையும் படிங்க: அக்காமலையில் 3 வயது மதிக்க தக்க ஆண் யானை உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details