தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டப்பகலில் மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்! - சட்டவிரோதமாக மனல் அள்ளிய இருவர் கைது

திருச்சி: மணப்பாறை அருகே பட்டப்பகலில் அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், ஓட்டுநர்கள் இருவரை கைதுசெய்தனர்.

பட்டப்பகலில் மணல் கடத்தல்
பட்டப்பகலில் மணல் கடத்தல்

By

Published : Feb 1, 2021, 11:07 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேவுள்ள பொன்சங்கிப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாகச் சிலர் கிராவல் மண் எடுப்பதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வட்டாட்சியர் லஜபதிராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்றனர்.

அங்கு, அவர்களிடம் விசாரித்தபோது அனுமதியின்றி மண் அள்ளியது உறுதியானது. இதையடுத்து, மண் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரத்தைப் பறிமுதல்செய்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் இயந்திரங்களை மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து, வாகனங்களின் உரிமையாளர், ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் வாகன ஓட்டுநர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர்கள் மீதும், வாகன உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை சிறைப்பிடித்து கிராம மக்கள் முற்றுகை!

ABOUT THE AUTHOR

...view details