தமிழ்நாடு

tamil nadu

மின்னல் தாக்கிய விபத்தில் 21 ஆடுகள் உயிரிழப்பு!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே மின்னல் தாக்கிய விபத்தில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 21 ஆடுகள் உயிரிழந்தன.

By

Published : Nov 5, 2020, 9:35 PM IST

Published : Nov 5, 2020, 9:35 PM IST

மின்னல் தாக்கிய விபத்தில் 21 ஆடுகள் உயிரிழப்பு
மின்னல் தாக்கிய விபத்தில் 21 ஆடுகள் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேவுள்ள கருத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் சொந்தமாக 80 செம்மறி ஆடுகளை வளர்த்துவருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை செய்வதற்காக முடிவு செய்திருந்தார். பெரிய ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் வேளையில் சின்னஞ்சிறிய ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று (நவ.04) 21 சிறிய செம்மறி ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்த அவர், இன்று (நவ.05) காலை கொட்டகையை திறந்து பார்த்த போது மின்னல் தாக்கியதில், ஆடுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 21 ஆடுகளும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

ஆடுகள் உயிரிழந்தது குறித்து காவல் துறைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர். உயிரிழந்த 21 ஆடுகளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் தொப்பம்பட்டியிலுள்ள அவரது தோட்டத்தில் சுமார் 15 ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (நவ.05) மாலை மணப்பாறை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மேய்ச்சலிலிருந்த ஆடுகளை ஜெயமேரி வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் ஐந்து ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழிந்தன. பின்னர், இது குறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவர்கள், இடி தாக்கி உயிரிழந்த ஆடுகளை உடற்கூராய்வு செய்தனர்.

இதையும் படிங்க: பனியன் குடோனில் இடி விழுந்து தீ விபத்து - பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

ABOUT THE AUTHOR

...view details