தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 19, 2019, 1:14 PM IST

ETV Bharat / state

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு: ரயிலை மறிக்க முயன்ற மாணவர்கள் கைது!

திருச்சி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

trichy
trichy

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கியமாக, கல்லூரி மாணவர்கள் இதற்காக போராடி வருகின்றனர். இதனிடையே திருச்சியில் சில தினங்களாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் கூட்டமைப்பு, மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் 50 மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

ரயிலை மறிக்க முயன்ற மாணவர்கள்

இதைத்தொடர்ந்து மாணவர்கள் ஜங்ஷன் நுழைவு வாயிலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: வகுப்புகளைப் புறக்கணித்து அரசுக்கு எதிராக முழங்கிய மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details