தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து நிகழ்வுடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்! - ஸ்ரீரங்கத்தில் பகல்பத்து நிகழ்ச்சி

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது.

ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் ஆலயம்
ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் ஆலயம்

By

Published : Dec 27, 2019, 12:54 PM IST

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் ஆலயம் 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது.

இந்நிகழ்வை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாளுக்கு நீள்முடி கிரீடம், வைர அபயஹஸ்தம், பவள மாலை, சூரிய பதக்கம் ஆகிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட உற்சவர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கத்திலுள்ள ரங்கநாதர் ஆலயம்

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் வரும் ஜனவரி ஆறாம் தேதி முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

இந்த தசாப்தத்தின் மிகப் பிரலமான டீனேஜர் யார் தெரியுமா ?

ABOUT THE AUTHOR

...view details