தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் 5 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு! - கரோனா வைரஸ்

திருச்சி: மாவட்டத்தில் இன்று 136 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 461ஆக உயர்ந்துள்ளது.

corona update
corona update

By

Published : Aug 5, 2020, 7:23 PM IST

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 5) புதிதாக 5 ஆயிரத்து 175 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கரோனாவால் 112 பேர் உயிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயித்து 461ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. திருச்சியில் இன்று ஒரே நாளில் 136 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 733ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,429 பேர் நேற்றுவரை சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,246ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 62 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா இறப்பு குறித்து அச்சம் வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details