திருச்சி தலைமை அஞ்சலகத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையம், நவீனமயமாக்கப்பட்ட மொத்த செயலாக்க மையம், பொதுச் சேவை மையம் ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அதன் இயக்குநர் தாமஸ் லூர்துராஜ் முன்னிலை வகித்தார். தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அஞ்சல் துறையின் ’கிரீன்’ முயற்சியின் ஒரு பகுதியான சூரிய மின் உற்பத்தி நிலையத்தை சுமதி ரவிச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து சுமதி ரவிச்சந்திரன் கூறுகையில், “ஊரடங்கு காலகட்டத்தில் அஞ்சல் நிலையத்தில் சாமானியர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அஞ்சல் துறை தமிழ்நாடு அரசுடன் இணைந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரணத் தொகையை 90 ஆயிரத்து 561 தொழிலாளர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கிக் கணக்குகள் மூலம் நேரடியாக வழங்கியுள்ளது.