திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகேயுள்ள கருங்குளம் வடக்குத் தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 1985 ஆம் ஆண்டு அதே பகுதியில் மாற்று இடம் (பஞ்சமி நிலம்) ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை தங்களுக்கு ஒதுக்கிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் இன்று (ஆக.31) திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.