திருச்சி "மாற்றம் அமைப்பு" சார்பில் அதன் உறுப்பினர்கள் அனைவரும், நிறுவன செயலாளர் தாமஸ் தலைமையில் இன்று (ஜூலை26) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது, ஆட்சியர் சிவராசுவை சந்தித்து புகார் மனு ஒன்றையும் வழங்கினர்.
அந்த மனுவில், “கரோனா ஊரடங்கு காரணமாக நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலக்கெடு முடியும்வரை மக்களை கடன் தொகையை திரும்ப செலுத்த வங்கி உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்கள் வற்புறுத்தக்கூடாது.