தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு - திருச்சி தற்போதைய செய்திகள்

திருச்சி: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு
இருசக்கர வாகன விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு

By

Published : May 29, 2020, 10:05 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜான் பிரான்சிஸ். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் தனது தந்தைக்கு மருந்து வாங்கிகொண்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பட்டி என்னும் இடத்தின் அருகே வந்தபோது, அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஒருவழிப்பாதையில், பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார், ஆனந்த், குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது எதிரில் வந்த ஜான் பிரான்சிஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளநாடு காவல்துறையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் உடற்கல்வி ஆசிரியரான ஜான் பிரான்சிஸ், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details