தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 633ஆக அதிகரித்துள்ளது.

By

Published : Sep 22, 2020, 4:57 AM IST

trichy Latest Corona  Uplate
trichy Latest Corona Uplate

திருச்சி மாவட்டத்தில் நேற்று (செப்.21) ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 633ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் செப்.20ஆம் தேதி வரை 769 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று ஒரே நாளில் 80 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 725 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா தொற்று காரணமாக நேற்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது. தற்போது இம்மாவட்டத்தில் 767 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details