தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 3, 2019, 9:52 AM IST

ETV Bharat / state

லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வடமாநில இளைஞர்கள் ஐந்து பேரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கொள்ளையர்கள்

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஐந்து வடமாநில இளைஞர்களிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல் துறையினரை கண்டதும் விடுதியில் இருந்த ஒரு வடமாநில இளைஞர் தப்பியோட முயன்றபோது கால் உடைந்து காயமடைந்தார். உடனே அவரை காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிடிபட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டால்தான் உறுதி செய்யப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரூ. 4 கோடி மதிப்புள்ள செல்ஃபோன்கள் அபேஸ்: பலே கில்லாடிகள் அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details