திருச்சியில் வரும் 23, 24ஆம் தேதிகளில் பன்னாட்டு வாழை கருத்தரங்கம் மற்றும் தேசிய வாழை கண்காட்சி நடைபெறுகிறது. இதுகுறித்து தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமா இன்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது உமா பேசுகையில், திருச்சி தேசிய வாழை ஆராய்சி மையம் மற்றும் தோட்டக்கலை முற்போக்குச் சங்கம் ஆகியவை இணைந்து திருச்சியில் "வாழை உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகளும், வாழை மதிப்புசார் வியாபாரச் சங்கிலி மேலாண்மையும்" என்ற தலைப்பில் பன்னாட்டு வாழை கருத்தரங்கம் வரும் 23, 24 ஆம் தேதிகளில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டப வளாகத்தில் நடத்த இருக்கிறது.
இதில், ஆராயச்சிகளும், தொழில் வாழை வணிகத்திலுள்ள வாய்ப்புகளையும், அச்சுறுத்தல்களையும் ஆராய்ந்து, அதற்குண்டான தீர்வுகளையும், உத்திகளையும், அது தொடர்பான ஆராய்ச்சி தேவைகளையும் கண்டுபிடிக்க வழிவகுக்கும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், பிரேசில், பெல்ஜியம், உகாண்டா, செக் குடியரசு, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரானஸ், ரோம், நைஜீரியா, ஜாம்பியா, நெதர்லாந்து, இலங்கை, மலேசியா, பிலிப்பைன்ஸ் இந்தோநேசியா போன்ற நாடுகளின் விஞ்ஞானிகளும், வாழை விவசாயிகளும், மாணவர்களும் கலந்துகொள்கின்றனர்.