தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா - திருச்சி செய்திகள்

திருச்சி: ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

eb
eb

By

Published : Nov 4, 2020, 11:34 AM IST

திருச்சி மன்னார்புரம் மின்சார வாரியம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய ஊழியர்கள் நேற்று (03.11.2020) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் வைத்த கோரிக்கைகள்:

  • மின் வட்டங்களில் பணியாற்றும் பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக் கூடாது.
  • துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
  • 42 ஆயிரம் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
  • சரண்டர் லீவு தொகையை வழங்க வேண்டும். பொறியாளர், தொழிலாளர், பகுதிநேர ஊழியர்கள், அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.
  • மின் உற்பத்தியை மின்வாரியமே செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு தொமுச மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன் துவக்க உரையாற்றினார். பொறியாளர் கழகத் துணைத் தலைவர் விக்ரமன் நிறைவுரை ஆற்றினார். நிர்வாகிகள் சந்தானகிருஷ்ணன், சங்கர் கணேஷ், ராஜமாணிக்கம், சிவ செல்வம், இருதயராஜ், தியாகராஜன், கருணாநிதி, பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

இந்தப் போராட்டத்தின்போது, மத்திய தொழிற்சங்க தலைவர்கள், அரசு ஊழியர்கள், எல் ஐ சி, வங்கி சங்கத் தலைவர்கள் சிறப்புரை ஆற்றினர்.

ABOUT THE AUTHOR

...view details