தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு! - திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் திருவிழா

திருச்சி: வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையத்தை மாநகர ஆணையர் வரதராஜூ திறந்து வைத்தார்.

trichy due to sri rangam temple festival news outpost police station has been opened
ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு!

By

Published : Dec 26, 2019, 10:07 AM IST

திருச்சியில் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் வரும் ஜனவரி 6ஆம் தேதியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தருவார்கள். இதனால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று மாலை வைகுந்த ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்க விலாஸ் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை திருச்சி மாநகர ஆணையர் வரதராஜூ புறக்காவல் நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை புறக்காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு!

இதையும் படியுங்க:

அப்போ குஷ்பூ, இப்போ மோடி... தமிழ்நாட்டில் புது கோயில்!

ABOUT THE AUTHOR

...view details