கரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று உலக நாடுகளை ஆட்க்கொண்டுள்ளது. இந்தியாலும் இதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 969 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமய மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்நாடு வந்த பலருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 39 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவக் குழுவினர் இரவு பகலாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் ஒரு நோயாளி மட்டும் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடித்து வந்துள்ளார். எனினும் மருத்துவக் குழுவினர் பொறுமையுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.