தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 3, 2022, 10:42 PM IST

ETV Bharat / state

திருச்சியில் முகாமிட்ட மும்மூர்த்திகள்!

'டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு வந்து கொண்டுள்ளது. திமுக, அதிமுக என்று பாரபட்சமில்லாமல் பணிகள் நிறைவு பெறாமல் யார் பணம் பெற்றாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என திருச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.

திருச்சியில் முகாமிட்ட மும்மூர்த்திகள் !
திருச்சியில் முகாமிட்ட மும்மூர்த்திகள் !

திருச்சி: சாலை மேம்பாட்டுப்பணிகள் மற்றும் பொதுப்பணித்துறையின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் திருச்சி பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் 14 கி.மீ., சாலை அமைக்கவேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை குறித்த கேள்விக்கு, '2ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். NHAI தான் இதை செய்ய முடியும். திருச்சியில் 1.6 கிலோ மீட்டர் அண்ணா சிலை முதல் மல்லாச்சிபுரம் வரை உயர்மட்ட சாலை. அதே போல் தலைமை தபால் நிலையம் முதல் எம்ஜிஆர் சிலை வரை உயர்மட்ட பாலம் அமைக்க திட்ட மதிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

பழைய சாலைகளை அப்புறப்படுத்திவிட்டு தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது. மில்லிங் செய்யாமல் ரோடு போடப்படுகிறது என்று எனக்கே புகார் வந்தது. ஆனால், கண்டிப்பாக மில்லிங் முறை செய்து தான் சாலைகள் அமைக்கப்படுகிறது. 6 அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகள் வாங்கி வைத்து வருகிறோம். உயரமான மரக்கன்றுகள் தான் சாலையில் வைக்கப்பட்டு வருகிறது.

டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எனக்கும் வந்துள்ளது. அதிமுக, திமுக என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் டெண்டர் பணிகள் முடிவடையாமல் பணம் பெறுகிறார்கள் என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நெடுஞ்சாலையை தனித்துறையாக்கியவர் கருணாநிதி. கல்லும் மண்ணுமாக கிடந்த சாலையை சரி செய்து அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவர் கருணாநிதி. அதனால் அந்த சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டுள்ளோம். இந்த பெயரால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தக் குழப்பமும் வராது. அமைச்சர் ஜெயக்குமாருக்கு மட்டும் தான் குழப்பம் வரும்’ எனப்பேசினார்.

இதையும் படிங்க:தருமை ஆதீன பட்டினப்பிரவேச தடை - அதனை நீக்கக்கோரி ஆன்மிக சமய பாதுகாப்புப் பேரவையினர் மனு

ABOUT THE AUTHOR

...view details