தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை - திருச்சியில் படுகொலை

திருச்சியில், பட்டப்பகலில் அடையாளம் தெரியாத மூன்று பேரால் செய்யப்பட்ட படுகொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை
முகமூடி அணிந்து பட்டப்பகலில் படுகொலை செய்த மூன்று பேர் : காவல்துறை விசாரணை

By

Published : Apr 24, 2022, 7:23 AM IST

திருச்சி:குழுமணி மெயின் ரோட்டில் சுப்புராம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரவிசந்திரன் எனும் நபர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டு உள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தவர்.

தனது இரு சக்கர வாகனத்தை சரி செய்வதற்காக அங்கு உள்ள கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் வந்துள்ளார். திடீரென முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு மூன்று பேர் வந்து சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.

காவல்துறையினர் இருசக்கர வாகனம் கடையில் இருந்த நபரைப் பிடித்து தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முன்விரோதம் காரணமாக 4 பேர் அவரைக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து ஜீயபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்க்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் வந்து விசாரணை செய்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க; பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவிப் பேராசிரியர் சரண்

ABOUT THE AUTHOR

...view details