தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலி! - திருச்சியில் குழந்தைகள் குளத்தில் உயிரிழப்பு

திருச்சி: நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலி
நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலி

By

Published : Jul 18, 2020, 9:40 PM IST

திருச்சி மாவட்டம் சிறுகனூர் முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் முகமது இலியாஸ். குவைத்தில் புணிபுரிகிறார். இவரது மகன் முகமது ஆசீப்.(12). மகள் ஆசிரா பானு(11). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆதம்ஷா. இவரது மகள் ரிஜிவானா பேகம் (7). 3 குழந்தைகளையும் பீவி என்கிற மூதாட்டி அருகில் உள்ள வாய்க்காலில் குளிக்க அழைத்து சென்றுள்ளார்.

அப்போது வாய்க்காலில் மண் அள்ளிய பள்ளம் தெரியாமல் அடுத்தடுத்து 3 குழந்தைகளும் நேரில் மூழ்கினர். குழந்தைகள் 3 பேரும் மூழ்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வந்து மூழ்கிய குழந்தைகளை மீட்டனர்.

அதற்குள்ள 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த சிறுகனூர் காவல் துறையினர் விரைந்து வந்து 3 பேரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பச்சிளம் பெண் குழந்தை குளக்கரையோரம் மீட்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details