தமிழ்நாடு

tamil nadu

திமுக ஊராட்சி தலைவர் மிரட்டல்: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்

By

Published : Dec 21, 2020, 3:59 PM IST

திருச்சி: திமுக ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டலால் ஒருவர் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

suicide
suicide

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பெரிய பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி பிரியா.

குழந்தை ரித்திக். இவர்களை திமுக காட்டுப்புத்தூர் ஊராட்சி தலைவர் கனகராஜ் நிலத்தை எழுதி கேட்டு மிரட்டுவதாகவும், தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன் தீக்குளிக்க முயன்றனர்.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற நபர்

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த காவலர்கள் உடனடியாக வந்து தடுத்து நிறுத்தினர். பின்னர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details