தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர் காவல்துறையினருடன் சலசலப்பு!

திருச்சி: முகக்கவசம் அணியாமல் வந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் இருப்பதாக கூறி அபாரதம் செலுத்த மறுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

By

Published : Apr 13, 2021, 12:57 PM IST

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர் காவல்துறையினருடன் சலசலப்பு!
இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர் காவல்துறையினருடன் சலசலப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று(ஏப்.13) காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், நகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது முக்கவசம் அணியாமல் வந்த நபர் தனது இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் இருப்பதாக கூறி அபாரதம் செலுத்த மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபர் காவல்துறையினருடன் சலசலப்பு!

இதனையடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்று விட்ட நிலையில் சற்று நேரத்திற்கு பின்னர் மீண்டும் வந்த அந்த நபர் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை தனது செல்போனில் வீடியோ எடுக்கும் பணியில் ஈடுபட்டார். இதனை கண்ட உதவி ஆய்வாளர் சதிஷ்குமார் அவரது செல்போனை பறித்து வைக்க, எனது செல்போனை பிடுங்க நீங்கள் யார்? எஸ்.ஐ என்றால் பெரிய ரவுடியா? என தகராறில் ஈடுப்பட்ட நபரை குடித்திருக்கிறாரா? என சோதனை செய்ய சொன்ன உதவி ஆய்வாளரிடம், ஆமா நான் குடுச்சிருக்கேன் என பேசிக்கொண்டே வீடியோ எடுத்த பத்திரிக்கையாளர்களை பார்த்து செய்தியை எழுதுங்கடானா பொய் பொய்யா எழுதுறாய்ங்க என ஒருமையில் போதையில் பேசிய நபரை செய்தியாளர்கள் கண்டித்தனர்.

இதையும் படிங்க:பெண் ஐஏஎஸ் பாலியல் புகார் விசாரணை: அரசிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

ABOUT THE AUTHOR

...view details