தற்காலிக பொறியாளர்கள் 104 பேருக்கு விதிமீறி பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று வேளாண் பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பொறியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சிவசண்முகம் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"வேளாண்மை பொறியியல் துறையில் 800 பொறியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். மழைநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்துவது, கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை இந்தப் பொறியாளர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
வேளாண் துறையின் கீழ்வரும் இந்தத் துறையில் 1998ஆம் ஆண்டு 104 தற்காலிக உதவி பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் 2012ஆம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த 104 உதவி பொறியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில் அவர்கள் பணிவரன்முறை செய்யப்பட்ட 2012ஆம் ஆண்டு முதல்தான் சீனியாரிட்டி கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் அவர்கள் தற்காலிகமாக நியமனம்செய்யப்பட்ட 1998ஆம் ஆண்டுமுதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் 200 பொறியாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.