தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகல்பத்து 3ஆம் நாள் - அலங்கார கொண்டையுடன் நம்பெருமாள் - ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 3ஆம் நாளான இன்று அலங்கார கொண்டையுடன் நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.

பகல்பத்து 3ஆம் நாள்
பகல்பத்து 3ஆம் நாள்

By

Published : Dec 6, 2021, 9:27 AM IST

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு விழா வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திருநெடுந்தாண்டகத்துடன் இவ்விழா கடந்த 3ஆம் தேதி தொடங்கியது.

பகல் பத்து வைபோகத்தின் முதல் நாள் (04.12.2021)- உற்சவர் நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடக் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து 2ஆம் நாள் (05.12.2021)- நம்பெருமாள் சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பகல்பத்து 3ஆம் நாள்

3ஆம் நாள் (06.12.21) - நம்பெருமான் அலங்கார கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம், மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்த புறப்பட்டார். பின்னர், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : வைகுண்ட ஏகாதேசி - சவுரி கொண்டே அலங்காரத்தில் நம்பெருமாள்

ABOUT THE AUTHOR

...view details