திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிவந்த 20 பேர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும், கடந்த 6 மாத காலமாக வேலையில்லாமல் வஞ்சிக்கும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநகர் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமைவகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் பேசினார்.