சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் விமான நிலையத்தில் உள்ள வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.15 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்!
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ரூ. 3.15 லட்சம் மதிப்புடைய தங்கத்தை மறைத்து கடத்தி வந்த பெண்ணிடமிருந்து தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
gold-seized-in-trichy-airport
அப்போது திருவாரூரைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவர் தனது உடைமையில் மறைத்து 99.8 கிராம் தங்கச் செயின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 3.15 லட்சம் ஆகும். நகையை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.