திருச்சியில் அபின் என்னும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் போதைப் பொருளான அபின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் வந்த இரண்டு பேரையும் காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பெரம்பலூரைச் சேர்ந்த அடைக்கலம், ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் பெரம்பலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மோகன் பாபு, ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், திருச்சி மான்பிடி மங்கலத்தைச் சேர்ந்த அத்தடையான் ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.