திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மைக்கல்(61). கூலித்தொழிலாளியான இவர், திங்கட்கிழமை இரவு மஞ்சம்பட்டியிலிருந்து மணப்பாறை நோக்கி தனது மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், எதிரே வந்த கார் ஒன்று மிதிவண்டியின் மீது மோதியது. இதில் மைக்கல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்
தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு - கார் மோதி முதியவர் பலி
திருச்சி: திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மிதிவண்டியில் சென்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
![தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி விபத்து - முதியவர் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4252767-thumbnail-3x2-car.jpg)
road-accident-in-trichy-to-dindigul-high-way
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், மைக்கல்லின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கார் ஒட்டுநரை கைது செய்த மணப்பாறை காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.