திருச்சி:திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றிலும் பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் நிரம்பியுள்ளன.
இப்பேருந்து நிலையத்திற்கு தினமும் 873க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துக்கள் 5 ஆயிரத்து 945 முறை வந்து செல்கின்றன. திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் இப்பேருந்து நிலையத்தை ரூ.28 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டது. பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிச.30ஆம் தேதி திறந்துவைத்தார்.
இதையடுத்து இன்று (ஜன.4) நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேருந்துகளுக்கு முன் கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களுடன் சிறிது தூரம் பேருந்தில் பயணம் செய்தனர்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம் மொத்தம் 11 ஆயிரத்து 852 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 7 ஆயிரத்து 30 சதுர மீட்டர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில் 15 பேருந்துகள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 54 கடைகளும், பயணிகள் காத்திருப்போர் அறையும், தாய்மார்கள் பாலூட்டும் அறையும் இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் உணவகம், பொருள்கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அறை, பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஓய்வு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் இன்று நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Pongal Gift Hamper: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்