தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பால் குடம் எடுத்த பக்தர்களுக்கு மோர் தந்த இஸ்லாமியர்கள் - பால் குடம் எடுத்த பக்தர்களுக்கு மோர் தந்த இஸ்லாமிய மக்கள் : திருச்சியில் நெகிழ்ச்சி..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர் நீர்மோர் வழங்கினார்.

பால் குடம் எடுத்த பக்தர்களுக்கு மோர் தந்த இஸ்லாமிய மக்கள் : திருச்சியில் நெகிழ்ச்சி..!
பால் குடம் எடுத்த பக்தர்களுக்கு மோர் தந்த இஸ்லாமிய மக்கள் : திருச்சியில் நெகிழ்ச்சி..!

By

Published : Mar 7, 2022, 6:39 AM IST

திருச்சி :திருவெறும்பூர் சோழ மாநகரில் ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு வழிபட்டால் குழந்தை வரம், திருமணத் தடை உள்ளிட்டவை நீங்கும் என நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாசி மாதம் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 24ஆம் ஆண்டு திருவிழா இன்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் சோழ மாநகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து சுமார் 250 பேர் ஊர்வலமாக அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்.

பால் குடம் எடுத்த பக்தர்களுக்கு மோர் தந்த இஸ்லாமிய மக்கள் : திருச்சியில் நெகிழ்ச்சி..!

பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு இஸ்லாம் மதத்தைச் சார்ந்த மக்கள் ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்து நீர்மோர் கொடுத்து களைப்பை போக்கினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் கடைசி இடத்தில் உள்ளது மயிலாடுதுறை மாவட்டம் - அமைச்சர் மா. சு வருத்தம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details