தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு! - Public petition for action on occupied areas

திருச்சி: குளத்தையும், வாய்க்கால் பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு

By

Published : Nov 7, 2019, 9:44 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த போடுவார்பட்டிக்கு உட்பட்ட குளம் மற்றும் அங்கிருந்து பூங்குடிப்பட்டி குளத்திற்கு செல்லும் வாய்க்கால்களை தனிநபர்கள் சிலர் நீண்ட காலங்காலாக ஆக்கிரமித்து வைத்திருந்தனர்.

இதை அகற்றி தரக்கோரி கிராம நிர்வாக அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும், அவர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் சிலர் மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து பொதுமக்கள் பேரணியாக சென்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மனு

அதில், இந்த குளத்தை நம்பி சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக அகற்றி தரக்கோரியும், எங்கள் கோரிக்கையை அலட்சியம் செய்த கிராம நிர்வாக அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியர், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details