திருச்சி கோட்ட ரயில்வே மெயில் சர்வீஸ் ஊழியர் சங்க கோட்ட மாநாடு நேற்று (பிப்ரவரி 19) கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, சங்க கொடியை ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் சங்கரன் உரையாற்றினார். மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் கணேசன் வரவேற்புரையாற்றினார். இந்த மாநாட்டில் கோவிந்தராஜ், குணசேகரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாநாட்டில் கீழ்காணும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கரூர் மாவட்ட தபால் நிலையத்தில் இருந்து தபால்கள் திருச்சிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கரூருக்கு அனுப்பப்படுகிறது. ஏற்கனவே இருந்ததைப் போல மீண்டும் ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்தில் ஸ்பீட்போஸ்ட் ஹஃப் தொடங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்களுக்கு தபால் சேவையை அளிப்பதற்கு உதவியாக உள்ள ராமேஸ்வரம் - சென்னை ரயில்களை மாற்றம் செய்யாமல் அதே வழியில் தொடர்ந்து இயக்க வேண்டும்.