திருச்சி: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
கடந்த 22ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி பகல் பத்து, இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பிரகாரங்களில் வீதி உலாவரும் நம்பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வழிபாடு செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழாவின் 7ஆம் திருநாளான இன்று சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள்(உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ரத்தின நீள்முடி கிரீடம், வெண்பட்டு, ரத்தின அபயஹஸ்தம், முத்துசரம் அடுக்கு பதக்கங்கள் மற்றும் காதுகாப்பு உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி
மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளினார்.