திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு வயதுடைய பெண் குழந்தை அழுதபடி கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த குழந்தையை மீட்டனர்.
முட்கள் குத்தியதால் காயத்துடன் இருந்த அந்த குழந்தைக்கு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், மேல் சிகிச்சைக்காக அந்தக் குழந்தையை மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டுசென்றனர்.