தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்ஐடி-யின் 59ஆவது ஆண்டு விழா.. - தேசிய தொழில்நுட்ப கழகம் கல்லூரியின் 59 ஆவது ஆண்டு விழா

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்து துவாக்குடியில் என்ஐடி-யின் 59ஆவது ஆண்டு விழா நேற்று (ஏப். 27) என்ஐடி வளாகத்தில் கல்லூரி இயக்குநர் அகிலா தலைமையில் நடைபெற்றது.

NIIT 59 ஆவது ஆண்டு விழா...
NIIT 59 ஆவது ஆண்டு விழா...

By

Published : Apr 28, 2022, 1:32 PM IST

திருச்சி:1964 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்து துவாக்குடியில் என்ஐடி தொடங்கப்பட்டது. இந்நிலையில் என்ஐடி-யின் 59ஆவது ஆண்டு விழா நேற்று (ஏப். 27) என்ஐடி வளாகத்தில் கல்லூரி இயக்குநர் அகிலா தலைமையில் நடைபெற்றது. இவ்விழா கல்வியாண்டில் கல்விசார் திறமைகளிலும் ஏனைய துறைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்கள், பேராசிரியர்களின் விடாமுயற்சி, வெற்றிகளை அங்கீகரித்து கவுரவிப்பதற்காக கொண்டாடப்பட்டது.

இதில் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையின் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) இயக்குநர் பேராசிரியர் முனைவர் வீ.காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

மேலும் ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கா காணொலி காட்சி மூலம் உறையாற்றினர். இதனைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டான 2022-23 இற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற உறுப்பினர்களை மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர். இவ்விழாவில் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திருச்சி என்ஐடி கல்லூரியில் வங்கதேச மாணவர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details