திருச்சி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. லீக் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியை தயாநிதி மாறன் எம்.பி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடக்கி வைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் ஆண்கள் பிரிவில் ஜமால் முகமது கல்லூரி அணி முதலிடமும், தமிழ்நாடு காவல் துறை அணி 2வது இடத்தையும் பிடித்தது. அதே போல பெண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல் துறை அணி முதலிடமும், ஜமால் முகமது கல்லூரி அணி 2வது இடத்தையும் பிடித்தது. வெற்றிபெற்ற அணிகளுக்கும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்த அணிகளுக்குக் கோப்பை, பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை தயாநிதி மாறன் எம்.பி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், “அவசர கதியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவே இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேச மறுக்கிறார். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டும் போது எதற்காக அது கூட்டப்படுகிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. சிறப்புக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்கிறார்கள் அதுவும் ஏன் எனத் தெரியவில்லை.
இதையும் படிங்க:Special Session of Parliament: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் சிறப்பு என்ன? எதிர்க்கட்சிகளுக்கு காத்திருக்கும் சவால்!