திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படவுள்ள இடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று மாலை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, டிஆர்ஓ சாந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு, "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் மணிமண்டபங்கள் அமைத்து பெருமை சேர்த்துவருகிறார். தமிழ்நாட்டில் 69 மணிமண்டபங்கள், ஐந்து அரங்கங்கள், நான்கு நினைவுச் சின்னங்கள், ஒரு நினைவுத் தூண் ஆகியவை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.