திருச்சி தனியார் மருத்துவமனை சார்பில் இதயத்திற்காக ஓடுவோம் என்ற தலைப்பில் மாராத்தான் ஓட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக இந்த மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
கொடியசைத்து ஓட்டம் தொடங்கியதும் பின்னால் இருந்தவர்கள் முந்திடியடித்துக் கொண்டு ஓட முயன்றனர். அப்போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்கள் பெரியவர்களுடன் ஈடு கொடுத்து ஓட முடியாமல் திணறினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது 10க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தடுமாறி கீழே விழுந்தனர்.