புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சுதந்திராபுரத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் சசிகலா (28). இவர் திருச்சி மிளகு பாறையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்துள்ளார். அப்போது சசிகலாவிற்கும் சரவணன் (28) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சரவணன் தனது காதலி சசிகலாவிடமிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை வாங்கி அடகு வைத்துள்ளார். அதனை மீட்டுத் தருமாறு சசிகலா தொந்தரவு செய்துள்ளார்.