திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருச்சி தனிப்படை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தப்பித்து ஓட முயற்ச்சித்தனர்.
அவர்களில் பிடிபட்ட மணிகண்டனிடம் நடத்திய சோதனையில் அவரிடம் லலிதா ஜுவல்லரியின் எம்பளம் பொறிக்கப்பட்ட நான்கு கிலோ 800 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தப்பி ஓடிய சீராதோப்பை சேர்ந்த சுரேஷின் உறவினர்களான ரவி ,மாரியப்பன், குணா ஆகியோரை திருச்சி தனிப்படை காவல் துறையினர் கைது செய்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவர் இந்த கொள்ளை கும்பலுக்குத் தலைவன் என கூறப்படுகிறது. இவர் வங்கி, ஏஎடிஎம்களில் பல கொள்ளைச் சம்பங்களில் ஈடுபட்டவர்.