திருச்சி:மணப்பாறை அருகேவுள்ள வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும், கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னிவளநாட்டிலும் பிப்.20ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி இன்று (பிப்.26) நடந்தது.
அதில், “பொன்னர் – சங்கர் மன்னர்களின் பெற்றோர்கள் மாண்டுவிட, தங்கை அருக்காணி என்னும் நல்லதங்காளின் ஆற்றாமையை போக்க பொன்னர் கிளி பிடிக்க, வீரமலை பகுதிக்குச் சென்று கிளி வேட்டை நடத்தி தங்கைக்கு கிளி பிடித்து தந்த வீர வரலாற்று நிகழ்வு” பொன்னிவளநாட்டில் இன்று நடைபெற்றது.