தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2023, 4:40 PM IST

ETV Bharat / state

திருச்சியில் முதல் முறையாக 'ஹேப்பி ஸ்ட்ரீட்' - எப்போது தெரியுமா?

திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 'Happy Street' நடைபெற உள்ளது.

திருச்சியிலும் வந்தாச்சு Happy Street
திருச்சியிலும் வந்தாச்சு Happy Street

திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மேலும், தினமும் காலை எழுந்த உடனே வேலைக்குத் தயாராகி, அன்றாடம் உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாடும் வகையில் சமீப காலமாகத் தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் தமிழகக் காவல்துறை மாவட்ட நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சியான 'Happy Street' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது.

அதேபோல், திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையைப் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் வருகின்ற 23.07.2023 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை திருச்சி நீதிமன்றம் MGR சிலை அருகில் ஸ்டூடண்ட் சாலையில் Happy Street, Young Indians என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகர காவல்துறை சார்பாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் Drone Shows, குழந்தைகளுக்கான விளையாட்டு திருவிழா (Kids Carnival), Zumba, மூத்த குடிமக்கள் பகுதி (Senior Citizen Corner), செல்லப்பிராணிகள் கண்காட்சி (Pet Shows), ஆட்டம் பாட்டம் (Dance Jocky), உடல் பரிசோதனைகள் (Health Screening), உணவுகள் விற்பனையகம் (Food Stalls) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி, போலீஸ் இசைக் குழு (Police Band Music), காவல்துறை துப்பறியும் மோப்ப நாய் படை கண்காட்சி மற்றும் பயனுள்ள பொருள்கள் விற்பனையகம் (Stalls) என 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இதில், திருச்சி மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து மகிழ்ச்சியாக இருக்கத் திருச்சி மாநகர காவல்துறை சார்பாக அன்போடு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் திருச்சி மாநகர பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதைப் பொருள் பழக்க வழக்கங்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு, நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும், கண்டுகளித்துப் பயன்பெறவும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:‘புராஜெக்ட் கே’ இல் பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்ஹாசன்! தலைப்பை அறிவித்த படக்குழு!

ABOUT THE AUTHOR

...view details