தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி: கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் - இன்று முதல் தொடக்கம்! - திருச்சி கால்நடை உதவியாளர்

திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் இன்று(ஏப்.11) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் இன்று முதல் தொடக்கம்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் இன்று முதல் தொடக்கம்

By

Published : Apr 11, 2022, 4:33 PM IST

Updated : Apr 11, 2022, 5:24 PM IST

திருச்சி:திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணலானது, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று(ஏப்.11) தொடங்கியது. திருச்சியில் காலியாக உள்ள 80 பணியிடங்களுக்கு 12,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான நேர்காணல் 11.04.2022 முதல் 13.04.2022 வரையிலும், 18.04.2022 மற்றும் 20.04.2022 முதல் 23.04.2022 வரை திருச்சி - புதுக்கோட்டை மெயின் ரோடு, கொட்டப்பட்டு பகுதியிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நேர்காணலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சி: கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் - இன்று முதல் தொடக்கம்!

அதன்படி இன்று முதற்கட்டமாக 1800 விண்ணப்பதாரர்களுக்கு தேர்காணல் தொடங்கியது. இதில் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டு மாடு பிடித்தும், சைக்கிள் ஓட்டியும் காட்டினர். பின்னர் அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, பொது அறிவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

இதையும் படிங்க: ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்- ராகுல் காந்தி!

Last Updated : Apr 11, 2022, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details