தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2019, 10:24 AM IST

ETV Bharat / state

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி: திடீரென பெய்த கனமழையால் மணப்பாறை பிரதான சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

File pic

திருச்சி மாவட்டம் மணப்பாறை அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. .இதனையடுத்து நகரில் உள்ள பிரதான சாலையில் கழிவு நீரோடு மழைநீர் கலந்து ஓடி ஆறு போல் காட்சியளித்தது.

இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நகராட்சி நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் கழிவு நீரோடு கலந்து மழைநீர் தேங்குவதாகவும்,பிரதான சாலையில் தேங்கும் மழைநீரை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்கை கடைபிடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

ABOUT THE AUTHOR

...view details