திருச்சி: புத்தாநத்தத்தை அடுத்த தோப்புபட்டியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகள் சத்யபிரியா (17) நேற்று (டிசம்பர் 29) மாலை தனது பாட்டி செல்லம்மாளுடன் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றிருந்தார்.
இவர்கள் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கிணற்றிற்கு சென்று பார்த்தனர். அங்கு இருவரும் கிணற்றுக்குள் மூழ்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர்.