தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 5:32 PM IST

ETV Bharat / state

தேர்வில் தோல்வி: பள்ளி மாணவி தற்கொலை!

திருச்சி: மணப்பாறை அருகே பனிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பழைய கோட்டையைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ரேணுகா (17) ஓந்தாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை16) பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகளை காண ரேணுகா பள்ளிக்குச் சென்றார். அப்போது தேர்ச்சி பெறாதவர்கள் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம்பெற்றிருந்ததை கண்டு மனமுடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

மாணவி ரேணுகா

இதனையடுத்து மாணவி மீண்டும் தேர்வு முடிவை இணையத்தில் பார்த்துள்ளார். அதில் வணிகவியல் மற்றும் வரலாறு உள்ளிட்ட இரண்டு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை என வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அவர், உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுப்பிவைத்தனர். எனினும் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு மாணவர்களின் மறு தேர்வுக்கான வழிகாட்டுதல் குறித்த அரசாணை வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details