திருச்சி: கண்டோன்மென்ட் அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் திருச்சி எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்.
இந்தத் தம்பதி கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சிவானி (13) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். சிவானி தனது அம்மா உடன் வசித்து வந்துள்ளார்.
சிறுமி தற்கொலை
தினமும் காலையில் ஷர்மிளா வேலைக்கு சென்று விடுவது வழக்கம். நேற்று (ஜன.25) வங்கிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்து கதவை தட்டியவுடன் மகள் கதவை திறக்கவில்லை.
பின்பு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது சிவானி தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.