தமிழ்நாடு

tamil nadu

தப்பி ஓடிய நைஜீரியா கைதி: அதிரடியாக கைது செய்த போலீஸ்!

By

Published : Sep 14, 2019, 7:11 PM IST

திருச்சி: மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய நைஜீரியா கைதியை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Nigerian

2016ஆம் ஆண்டு திருப்பூரில் எவ்வித ஆவணங்களும் இன்றி சுற்றித் திரிந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் ஜான் ஓபுஜி( 32) என்பவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சமீபத்தில் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஸ்டீபன் ஜான் ஓபிஜி தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் திருச்சி மத்திய சிறை வட்டாரங்களிலும், காவல்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சி மத்திய சிறை

தப்பி ஓடிய ஸ்டீபனை பிடிப்பதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கே.கே நகர் காவல் நிலைய ஆய்வாளர் சகாயம் அன்பரசு தலைமையிலான எட்டு பேர் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. தப்பியோடிய கைதியை பிடிக்க சிறப்பு படையினர் பெங்களூர், ராஜஸ்தான், ஹரியானாவை தொடர்ந்து இறுதியில் டெல்லிக்கு அருகே உள்ள சோனிபட் எனுமிடத்தில் அந்த நபரை பிடித்தனர்.

மேலும் பிடிக்கப்பட்ட ஸ்டீபன் பற்றி காவல் துறையினர் கூறுகையில், தப்பித்துச் சென்ற நபர் ஹரியானாவில் உள்ள மிகப்பெரிய டிரக்ஸ் கேங்க் நாதுராம் கேங்குடன் இணைந்து சுற்றி வந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாதுராம் காவல்துறை மூலம் கைது செய்ததையடுத்து, ஸ்டீபனை பின்தொடர்ந்து ஒரு இடத்தில் வைத்து வளைத்து பிடித்தோம் என்றனர்.

சம்பந்தப்பட்ட ஸ்டீபன் இரண்டு மாதங்கள் பின்தொடர்ந்து பிடித்து வந்த இன்ஸ்பெக்டர் சகாயம், அன்பரசு தலைமையிலான படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details