தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய 4 கிலோ தங்கம் - திருச்சி விமான நிலையம்

திருச்சி விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Trichy airport
Trichy airport

By

Published : Sep 29, 2021, 1:02 PM IST

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது வீட்டு உபயோக பொருளில் மறைத்து 4 கிலோ தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ.1.92 கோடியாகும்.

இதுதொடர்பாக கடலூரை சேர்ந்த மாரிமுத்து வினோத், கள்ளக்குறிச்சியை சேர்ந்த இப்ராஹிம் சாகுல் ஆகிய இரு பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் தொடர் விசாரணை கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உள்ளாடைக்குள் வைத்து ரூ.28 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

ABOUT THE AUTHOR

...view details