திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பர்ஷத் அலி என்பவர் திருச்சி சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று பிற்பகலில் கட்டிங் வீல் வாங்க, அவரது கடைக்கு துருக்கி நாட்டைச் சேர்ந்த ஜோடி வந்தனர். வந்தவர்கள் பொருட்கள் வாங்கிய பின், சில்லறை தாள்கள் கொடுத்து அதற்கு மாற்றாக ரூ.2 ஆயிரம் முழு நோட்டை பெற்றனர்.
அதே நேரத்தில் அந்த பெண் பேச்சுக் கொடுத்து திசை திருப்ப அந்த வெளிநாட்டுப் பயணி நோட்டைத் தானே கிழித்துவிட்டு, ரூபாய் கிழிந்துள்ளது என்றும் தனக்கு CL வரிசை தாள் வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது CL நோட்டைத் தேடுவதைப்போல லாவகமாக 17 ஆயிரம் ரூபாயை அந்த வெளிநாட்டுப் பயணி திருடி தன் பையில் போட்டுக்கொண்டு வேகவேகமாக சென்றுவிட்டனர்.